ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு: 23 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

பாக்தாத்: ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 23 பேர் உயிரிழந்தனர். பாக்தாத்தின் அமில் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 45 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொருப்பேற்றுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மொசூல் நகரை ஈராக் அரசு படைகள் அன்மையில் மீட்டுள்ளது. மேலும் ஐ.எஸ் இயக்கத்தை முழுமையாக ஒழிப்பதற்கு ஒரு லட்சம் அரசு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீவிரவாதிகள் கார் குண்டை வெடிக்க செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை