அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை

தினமலர்  தினமலர்
அதிக டிபாசிட் விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை

புதுடில்லி: அதிக 'டிபாசிட்' குறித்து இரண்டாம் கட்ட ஆய்வில், மூத்த குடிமக்கள் செய்த முதலீடுகள் குறித்து விசாரிக்கப்பட மாட்டாத என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

'வங்கிகளில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்பட்டுள்ள டிபாசிட்டுகள் குறித்து, இரண்டாம் கட்ட ஆய்வில் முக்கியத்துவம் தரப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வருமான வரித்துறை நேற்று அளித்துள்ள விளக்கம்: மூத்த குடிமக்களுக்கான, 70 வயதுக்கு மேற்பட்டோர் செய்துள்ள முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படாது. அதே நேரத்தில், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள, மற்ற அனைத்து கணக்குகள் குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு வருமான வரித்துறை கூறியுள்ளது.

மூலக்கதை