மதுக்கர் ரெட்டியிடம் விசாரணை பெங்களூரு போலீசுக்கு அனுமதி

தினகரன்  தினகரன்

பெங்களூரு:  ஜோதி உதய் தாக்குதல் வழக்கில் கைதான மதுக்கர்ரெட்டியை 15 நாட்கள் பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. பெங்களூரு ஜே.சி ரோட்டில் உள்ள கார்ப்ப ரேஷன் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற ஜோதி உதய் மீது தாக்குதல் நடத்தியதாக ஆந்திரா போலீசார் மதுக்கர் ரெட்டி என்பவரை கைது செய்துள்ளனர். தற்போது ஆந்திரா போலீசார் காவலில் உள்ள அவரை, காவலில் எடுத்து விசாரணை நடத்தும் நோக்கில் பெங்களூரு போலீசார் அங்கு முகாமிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா நீதிமன்றம் அவரை பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. போலீசார் அனுமதி வழங்கியதை அடுத்து வரும் 28ம் தேதியில் இருந்து தொடர்ந்து 15 நாட்கள் பெங்களூரு போலீசார்ஜோதி உதய் தாக்குதல் வழக்கில் கைதான மதுக்கர்ரெட்டியிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

மூலக்கதை