துணி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்

பெங்களூரு:  பெங்களூரு கெங்கேரியில் துணி வியாபாரி ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு கெங்கேரி சரகத்திற்குட்பட்ட மாருதிநகர் பகுதியை சேர்ந்தவர் ரானோஜிராவ் (45). சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காக பல லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. போதிய வருவாய் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது. மேலும் செக் கொடுத்தால் அதுவும் பவுன்ஸ் ஆனது. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதில் மனம் நொந்த வியாபாரி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தற்கொலை காட்சியை அவர் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றியபோது, செல்போன் கிடைத்தது. அதில் அவர் தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்திருந்தார். கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை உறுதி செய்த போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் கெங்கேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை