அரிய தீ வானவில்: சிங்கப்பூர் மக்கள் வியப்பு!!

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
அரிய தீ வானவில்: சிங்கப்பூர் மக்கள் வியப்பு!!

சிங்கப்பூர் நாட்டில் திடீரென தோன்றிய அரிய தீ வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.


    சிங்கப்பூர் நாட்டின் வடகிழக்கே மாலை மேகத்தின் பின்னால் பல வண்ண ஒளியில் இந்த தீ வானவில் தோன்றியது.

இந்த தீ வானவில் சுமார் 15 நிமிடங்கள் வரை வானில் தோன்றி பின்னர் மறைந்தது.
  சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஃபேஸ்புக் பதிவில் தீ வானவில் குறித்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.  
  ஒளி விலகல் எனப்படும் விஞ்ஞான நிகழ்வின் மூலம் காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் தீ பிழம்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
  அரிய தோற்றம் கொண்ட தீ வானவில்லை சிங்கப்பூரின் பல பகுதிகளில் மக்கள் கண்டுகளித்தனர்.

.

மூலக்கதை