பெப்சி தலைவராக ஆர்கே செல்வமணி தேர்வு

தினமலர்  தினமலர்
பெப்சி தலைவராக ஆர்கே செல்வமணி தேர்வு

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளடக்கியுள்ளது. இதில் ஆர்கே செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும், எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் ஒரு அணியினரும் களமிறங்கினர். இதற்கு இன்று தேர்தல் நடந்தது. 23 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஓட்டு போட்டனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மாலை வெளியிடப்பட்டன. இதில் தலைவராக செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக சண்முகமும், பொருளாளராக சுவாமிநாதனும், துணை தலைவர்களாக 5 பேரும், இணைச் செயலாளர்களாக 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை