கோழிக்கோடு ஜவுளிக்கடையில் தீ விபத்து: 15 கடைகளுக்கு தீ பரவியதால் பல கோடி ரூபாய் சேதம்

தினகரன்  தினகரன்

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 3 அடுக்குமாடி ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகின. அங்கு மிட்டாய் தெருவில் உள்ள கடையில் முதலில் தீ பிடித்தது. மளமளவென பரவிய தீ அங்கிருந்த 15 கடைகளுக்கும் பரவி எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது. 7 தீயணைப்பு வண்டிகள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் ஜவுளிக்கடை முழுவதும் எரிந்துவிட்டது. அதன் அருகிலிருந்த கடைகளும் தீக்கறையாக்கின. ஜவுளிக்கடையின் ஒரு தளத்திலிருந்த சமையல் எரியாவு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே தீ விபத்திற்கு காரணம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை