சாலையில் சிதறி கிடந்த செல்லாத கரன்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாலையில் சிதறி கிடந்த செல்லாத கரன்சி

பாலக்காடு- கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பி அடுத்த குளப்புள்ளி பகுதியில் சாலையோரத்தில், மத்திய அரசால் தடை செய்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பாலித்தீன் கவரில் கட்டி மர்ம ஆசாமிகள் தூக்கி வீசி சென்றுள்ளனர். இவை காற்றில் பறந்து சிதறி கிடந்தன.

ஷொரணூர் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து எண்ணிப்பார்த்தனர். அதில் ஒரு கட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 158, இரண்டாக கிழிந்த நிலையில் 89 ஐநூறு ரூபாய் நோட்டுகளும் காணப்பட்டன.

மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் சிதறிக்கிடந்தது.

பழைய கரன்சி செல்லாது என்ற காரணத்தால் அவற்றை யாரோ தூக்கி வீசி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

.

மூலக்கதை