சக வீரர்களுடன் ரயிலில் பயணம் செய்த கேப்டன் கூல்

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட்அணியின் அதிரடி ஆட்டக்காரர் டோணி சக வீரர்களுடன் ராஞ்சியில் இருந்து கொல்கத்தா வரை ரயிலில் பயணம் செய்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார். உள்நாட்டு அணிகள் பங்கு பெறும் விஜய் ஹசாரே தொடர் போட்டியில் சொந்த மாநிலம் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக டோணி செயல்பட உள்ளார். 25ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க ஜார்கண்ட் அணி வீரர்கள்  ராஞ்சியில் இருந்து கொல்கத்தா பயணித்தனர். அதே ரயிலில் சக வீரர்களுடன் டோணியும் கொல்கத்தா சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் \'நான் 13 வருடங்களுக்கு பிறகு ரயிலில் பயணித்துள்ளேன் என்றும் இந்த பயண நேரத்தை நான் முழுமையாக ரசித்தேன் என்றும் கூறியுள்ளார்.  தோணியை ரயில் நிலையத்தில் சந்திக்க கூட்டம் அலைமோதியது.

மூலக்கதை