மாநகராட்சி ஊழியர் தீக்குளித்து சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநகராட்சி ஊழியர் தீக்குளித்து சாவு

கீழ்ப்பாக்கம்- சென்னை அயனாவரம், கே. கே. நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (42). இவர் மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்.

இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். தாமோதரனுக்கு குடிப்பழக்கம் இருந்தததாக தெரிகிறது.

நேற்றிரவு 8. 30 மணியளவில் குடிபோதையில் வந்த தாமோதரன், வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பலத்த காயமடைந்த தாமோதரனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை தாமோதரன் பரிதாபமாக இறந்தார்.

.

மூலக்கதை