ஆசியாவின் சிறந்த உணவகங்களில் இலங்கைக்கும் இடம் கிடைத்தது
பாங்கொக்கில் இடம்பெற்ற உலக உணவகங்களுக்காக விருது வழங்கும் நிகழ்வில்,ஆசியாவிலுள்ள சிறந்த 50 உணவகங்களின் பட்டியலில் இலங்கை உணவகங்கள் இரண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்களாக மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரால் நடத்தப்பட்டு வரும்'மினிஸ்ட்ரி ஒப் கெப்’என்ற உணவகம் 50 சிறந்த உணவகங்களில் 29ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அத்துடன், ஜப்பானின் சம்பிரதாயங்களை அடிப்படையாக வைத்து இலங்கையில் நடத்தப்பட்டு வரும் 'நிஹோன் பஷி' என்ற உணவகம் இடத்தைப் பிடித்துள்ளது.