தீபா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் அதிமுக எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீபா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் அதிமுக எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை

செய்யாறு- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தின் சுற்றுப்புற சுவற்றில் ஜெ. தீபா பேரவையின் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்தது.

இன்று காலை பார்த்தபோது அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதை அதிமுக எம்எல்ஏ தூசி கே.

மோகனின் ஆதரவாளர்கள் கிழித்ததாக கூறப்பகிறது.
இதையறிந்த தீபாவின் ஆதரவாளர்கள், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11மணியளவில் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள், தீபா ஆதரவாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் எம்எல்ஏ ஆதரவாளர்கள் தங்களை தாக்கியதாக தீபா ஆதரவாளர்கள் கூறினர்.

இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி தீபா ஆதரவாளர்கள் எம்எல்ஏ அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

அதேபோல் செய்யாறு அருகே உள்ள வடதிண்ணலூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் கலந்து கொள்ள எம்எல்ஏ தூசி மோகன் சென்றார்.

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்பட்டதை கண்டித்து தீபா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எம்எல்ஏவை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை