பாவனா விவகாரம் சினேகா ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாவனா விவகாரம் சினேகா ஆவேசம்

நடிகை பாவனா சில தினங்களுக்கு முன் மாஜி டிரைவர் உள்ளிட்ட சிலரின் பாலியல் கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகை சினேகா கூறியது: எனது சக நடிகை பாவனாவுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனம் வருந்துகிறேன். அவருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்வதுடன் துணையாக இருப்பேன்.

தன் மீது நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் எடுத்திருக்கும் நடவடிக்கை துணிச்சலானது. ஒவ்வொரு நாளும் பெண்கள் பலர் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

3 வயது குழந்தை, 7 வயது குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதுடன் அவர்கள் குப்பை தொட்டியில் வீசப்படுகிறார்கள். இதையறியும்போது இதயம் சுக்கு நூறாக வெடித்துவிடும்போலிருக்கிறது.

ஆண், பெண் இருபாலினருக்கும் சம உரிமையை இறைவன் தந்திருக்கிறான் என்று கதைகளில் படிக்கிறோம். ஆனால் பெண்கள் பல வழிகளில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

இதை எதிர்த்து போராட இதுதான் சரியான நேரம். பெண்களுக்கான மரியாதை தரப்பட வேண்டும்.

அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இனியும் நிருபயா போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவங்கள் நடக்கக்கூடாது.

இவ்வாறு சினேகா கூறி உள்ளார்.


.

மூலக்கதை