காணாமல் போனவர் காட்டுக்குள் சடலமாக மீட்பு! - நீடிக்கும் மர்மம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காணாமல் போனவர் காட்டுக்குள் சடலமாக மீட்பு!  நீடிக்கும் மர்மம்!!

Yvelines மாவட்டத்தில் 23 வயதுடைய பெண் ஒருவரும், 24 வயதுடைய ஆண் ஒருவரும் அடுத்தடுத்த வாரத்தில் காணாமல் போயுள்ளார்கள் என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் 24 வயதுடைய இளைஞரின் உடல் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை  முதல் குறித்த இளைஞன் காணாமல் போயிருந்ததாக அவரின் சகோதரன் தெரிவித்துள்ளார். மேலும் அவரை கண்டால் தகவல் தரும்படி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவந்துள்ளார். அதை தொடர்ந்து, நேற்று Yvelines மாவட்டத்தின் Rambouillet காட்டுப்பகுதியில் வைத்து காவல்துறையினரால் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணைகளில், இது தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த இளைஞன் காணாமல் போவதற்கு சில வாரங்களாக தீவிர மன உளைச்சலாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மூலக்கதை