நாங்கூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ஓபிஎஸ்க்கு ஆதரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாங்கூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ஓபிஎஸ்க்கு ஆதரவு

சீர்காழி- நாகை மாவட்டம், நாங்கூரில் ஊராட்சி செயலாளர், 11 கிளை செயலர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. முன்னாள் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் நாடி. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரமோகன், மூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.

நாங்கூர் ஊராட்சிக்குட்பட்ட 11 கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் அதிமுகவினர் கூண்டோடு ஓ. பன்னீர்செல்வம், தீபா ஆகியோரின் தலைமையை ஏற்று தொடர்ந்து செயல்படுவது, நாளை மறுநாள்(24ம் தேதி) ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆத்மா சாந்தியடைய நாங்கூர் நாராயணபெருமாள் கோயிலில் மோட்சதீபம் ஏற்றுவது,  மக்களின் விருப்பத்திற்கு மாறாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எம்எல்ஏக்கள் வாக்களித்ததற்கு அனைத்து கிளை சார்பாக கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

.

மூலக்கதை