சீனாவில் தொடங்கியுள்ள சர்வதேச பனிச்சிற்ப திருவிழா: கைகளில் பிடிமானமின்றி பனிச்சிற்பங்களில் சாகசம் செய்த வீரர்
சீனா: சீனாவில் பனிக்கட்டிகளால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களுக்கு நடுவே கைகளில் பிடிமானமின்றி தாவி குதித்தபடியே வலம் வந்த வீரர் ஒருவர் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். ஹர்பின் நகரில் தொடங்கியுள்ள சர்வதேச பனிச்சிற்ப திருவிழாவில் தான் இந்த சாகசம் அரங்கேறியது. மாடமாளிகைகள், சீன வரலாற்றின் ஆய்வாளர்களின் உருவங்கள், இயற்கையின் அழகை கண்முன் நிறுத்தும் வடிவங்கள் என 10,000-க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. ஜேசன்பால் என்ற ஜெர்மனி தடகள வீரர் கைகளில் எவ்வித உபகரனமுமின்றி தாவி குதித்தபடி பனிச்சிற்பங்களை கடந்து சென்ற காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 25 டிக்ரி செல்சியசுக்கும் குறைவான வெப்ப நிலையில் ஜேசன்பால் நிகழ்த்திய சாகசத்திற்கு கைகொடுத்தது அவரது பிரத்தியேக ஷூ மட்டுமே. அந்த ஷூவின் அடியில் தைக்கப்பட்டுள்ள ஆணிகள் சாகசத்திற்கு நடுவே அவர் உடலை சமநிலைபடுத்தியது.