யாழில் போராட்டம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
யாழில் போராட்டம்

-எஸ்.ஜெகநாதன்

கேப்பாப்புலவு மற்றும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்தும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதில்களை வழங்குமாறு வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் கிராமிய உழைப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில், பொது அமைப்புக்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த அமைப்புக்கள் கலந்துகொண்டன.

'கேப்பாப்புலவு மக்களின் வாழ்விடங்கள், எந்த நிபந்தனை இன்றியும் தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டும்', 'வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது?' 'காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முடிவு என்ன? 'அரசே பதில் சொல்!' 'அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? நல்லாட்சியின் போலி முகமே பதில் சொல்', 'மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம். இராணுவமே மக்களின் நிலங்களை விட்டு வெளியேறு' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூலக்கதை