சிங்கப்பூரில் தோன்றிய அரிய 'தீ வானவில்': பொதுமக்கள் வியப்பு

தினகரன்  தினகரன்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தோன்றிய அரிய தீ வானவில்-லை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். வட - கிழக்கு மாவட்ட சிங்கப்பூரில் திங்கள் அன்று மாலை 5 மணி அளவில் ஒரு மேகத்தின் பின்னால் பல வண்ண ஒளியில் இந்த தீ வானவில் தோன்றியது. இந்த தீ வானவில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறைந்தது. சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதன் பேஸ்புக் பதிவில் தீ வானவில்  குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. ஒளி-விலகல் எனப்படும் அரிய விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அரிய தோற்றம் கொண்ட \'தீ வானவில்\' ஒன்றை சிங்கப்பூரின் பல பகுதிகளில் மக்கள் கண்டு ரசித்தனர். இது குறித்து நாசா கூறும் போது  தீ வானவில்லானது  சூரியன் வானத்தில் 58 டிகிரி கோணத்தில் மேகங்களுடன் ஊடுருவும் போது  இந்து உருவாகின்றன எனகூறி உள்ளது

மூலக்கதை