திமுக இன்று உண்ணாவிரத போராட்டம்
பிப்ரவரி 18 ம் தேதி சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் இன்று (பிப்ரவரி 22) உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துரைமுருகுன் தலைமையிலும் உண்ணாவிரதம் நடக்க உள்ளது.
திமுக நடத்தும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரசும் பங்கேற்கும் என தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசு நேற்று அறிவித்துள்ளார்.