சீன அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

தினகரன்  தினகரன்

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை செயலர் ஜெய்சங்கர், அந்நாட்டு நிர்வாக அதிகாரியை நேரில் சந்தித்துப்பேசினார். இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர், இலங்கை, சீனா மற்றும் வங்கதேசத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இலங்கை சென்றிருந்த வெளியுறவுத் துறை செயலர், நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு நிர்வாக அதிகாரி யாங் ஜியாசியை அவர் சந்தித்து பேசினார். யாங் ஜியாசி, இந்திய-சீன எல்லைப் பேச்சுவார்த்தைக்கான சிறப்பு பிரதிநிதியாவார். தொடர்ந்து அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சாங் யெஸ்சி ஆகியோரையும் ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசவுள்ளார்.

மூலக்கதை