பாக்கெட் தேயிலை தொழில்; மறுசீரமைக்க எவரெடி முடிவு
கோல்கட்டா : எவரெடி நிறுவனம், பாக்கெட் தேயிலை விற்பனையை, மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், பாக்கெட் தேயிலையின் சந்தை மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் இருப்பதாக, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதில், இந்துஸ்தான் யூனிலீவர், டாடா டீ ஆகியவை, அதிக பங்கை கொண்டுள்ளன. எவரெடி நிறுவனம், ‘டெஸ், ஜாகோ, பிரீமியம் கோல்ட்’ ஆகிய பெயர்களில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தேயிலையை விற்பனை செய்கிறது. இந்நிலையில், அந்நிறுவனம், தேயிலை விற்பனையை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேயிலை சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 1 முதல், 5 சதவீதம் என்றளவில் உள்ளது. கடந்த ஆண்டில், எங்கள் நிறுவன விற்பனை, 1,331 கோடி ரூபாயாக இருந்தது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், தேயிலை விற்பனையில் மாற்றம் செய்ய விரும்புகிறோம். இதற்காக, மறுசீரமைப்பு பணிகளை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.