தாக்குதல் நடத்த திட்டம்! - மூன்று பயங்கரவாதிகள் அதிரடி கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
தாக்குதல் நடத்த திட்டம்!  மூன்று பயங்கரவாதிகள் அதிரடி கைது!!

பயங்கரமான தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த மூன்று பயங்கரவாதிகளை இன்று செவ்வாய்க்கிழமை பரிசின் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். 
 
சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை Marseille இன் Clermont-Ferrand பகுதியில் இடம்பெற்றுள்ளது. பரிசின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (DGSI) இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மேற்படி மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாத கண்காணிப்பு கடந்த ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகவும், பின்னர் இவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. 
 
பயங்கரவாத அச்சுறுத்தல்களும் தாக்குதல் திட்டங்களும் அதிக அளவில் பிரான்சில் நிலவுகிறது. கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி லூவரில் நூதனசாலையில் கடமையில் நின்ற இராணுவ வீரர் ஒருவர்  தாக்கப்பட்டமையும், அதன் பின்னர் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் திட்டம் ஒன்றை வகுத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை