அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பை தொடர்ந்து - பெண்ணின் சடலம் மீட்பு!
அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இளம் பெண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Val-de-Marne இன் Fontenay-sous-Bois பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினருக்கு இனம்காண முடியாத (anonymous) அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதைத் தொடர்ந்து Fontenay-sous-Bois பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 27 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தாதியராக பணிபுரிந்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்ம தொலைபேசி அழைப்பில் 'இது ஒரு விபத்து!' என குறிப்பிட்டதாக அறியமுடிகிறது. சடலம் குளியறையில் அறையில் நிர்வாணமாக கிடந்துள்ளது எனவும், 'வன்முறை' சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருந்ததாகவும் அறியமுடியவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண் மூச்சுத்திணறல் (asphyxie) ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மர்ம தொலைபேசி அழைப்பு Algeriaஇல் இருந்து வந்துள்ளதாகவும், சடலம் மீட்கப்பட்ட வீட்டின் கதவு உடைக்கப்பட்ட அடையாளம் எதுவும் இல்லை எனவும், இது இந்த வழக்கை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் அறியமுடிகிறது. பிரேத பரிசோதனைகளின் பின்னே மேலதிக விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.