சசிகலாவை வேறுசிறைக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் தான் கோரிக்கை வைக்க முடியும்: ஆச்சார்யா

தினகரன்  தினகரன்

பெங்களூரு: சீராய்வு மனு உள்ளிட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வாய்ப்பு குறைவு என கர்நாடக வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து கருத்து தெரிவித்த ஆச்சார்யா இவ்வாறு தெரிவித்தார். சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் தான் கோரிக்கை வைக்க முடியும் என்று கர்நாடக வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே உச்சநீதிமன்றத்தின் தீவிர கண்காணிப்பில் தான் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை