ஜேர்மனியில் வெள்ள பெருக்கு மற்றும் கடுமையான புயல் எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜேர்மனியில் வெள்ள பெருக்கு மற்றும் கடுமையான புயல் எச்சரிக்கை!

 ஜேர்மனியில் வெள்ள பெருக்கு மற்றும் கடுமையான புயல் ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
ஜேர்மனியின் வானிலை மையம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், வரும் வாரங்களில் ஜேர்மனியின் பல பகுதிகளில் பலத்த புயல் காற்றுடன் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
ஜேர்மனியின் வடக்கே இருக்கும் மாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 60 கிலோ மீட்டர் அளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Harz Mountains பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு 110 கிலோ மீட்டர் அளவு பலத்த சூறாவளி காற்று வீசும் எனவும், பொதுமக்கள் மரங்கள், கட்டிடங்கள் அருகில் நிற்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
அதே போல மக்கள் முடிந்தளவு வீட்டை விட்டு வெளில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பல இடங்களில் பலத்த மழையுடன் பனிப்பொழிவும் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை