ஒரே வருடத்தில் 3 படங்களில் நடிக்கிறார் ரகுல் ப்ரீத் - ‘ரீ என்ட்ரி’ ஆவதால் கோலிவுட் ஹீரோயின்கள் கலக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே வருடத்தில் 3 படங்களில் நடிக்கிறார் ரகுல் ப்ரீத்  ‘ரீ என்ட்ரி’ ஆவதால் கோலிவுட் ஹீரோயின்கள் கலக்கம்

கடந்த 2014ம் ஆண்டு என்னமோ ஏதோ படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங், தமிழில் போதிய வாய்ப்பில்லாததால் தெலுங்கில் நடிக்கச் சென்றார். கடந்த 3 வருடமாக தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தவர் தனக்கென ஒரு இடத்தை அங்கு பிடித்தார்.

அதன்பிறகு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதும் எதையும் ஏற்காமல் மவுனம் காத்து வந்தார். நல்ல ஸ்கிரிப்ட், பெரிய இயக்குனர், பெரிய நடிகர் படம் வந்தால் மட்டுமே தமிழில் ரீ என்ட்ரி ஆவது என்று முடிவு செய்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்க வாய்ப்பு சென்றது.

முதலில் நடிக்க சம்மதித்தவர் திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார்.

அதேசமயம் தமிழ், தெலுங்கில் கார்த்தி நடிப்பில் உருவாகும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகும் சம்பவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது சூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரகுல். 3 வருடம் கண்டுகொள்ளாமலிருந்தவர் தற்போது ஒரு வருடத்தில் 3 படங்களை தமிழில் ஒப்புக்கொண்டிருப்பது கோலிவுட் ஹீரோயின்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


.

மூலக்கதை