விஜய்க்கு ‘நோ’ பாலாவுக்கு ‘யெஸ்’ - ஜோதிகா புதுமுடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஜய்க்கு ‘நோ’ பாலாவுக்கு ‘யெஸ்’  ஜோதிகா புதுமுடிவு

தெறி படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை 2வது முறையாக இயக்குகிறார் அட்லி. இதில் காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா நடிக்கவிருந்தனர்.

ஜோதிகாவிடம் இயக்குனர் அட்லி கதை சொன்னபோது சில மாற்றங்களை அவர் தெரிவித்தாராம். அதற்கு ‘ஓகே’ கூறிவிட்டு வந்தவர் பிறகு அதுபற்றி பதில் எதுவும் சொல்லாமல் படப்பிடிப்பு தொடங்கினார்.

இதில் ஜோதிகா அப்செட் ஆனார். இதையடுத்து படத்திலிருந்து விலகினார்.

தற்போது, பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் முடிவடைந்து திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்நிலையில் இஒஎன் என்ற பட நிறுவனம் இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கிறது. இதில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார்.

முன்னதாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலா. வரும் மார்ச் 1ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சசிகுமார், வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறார் பாலா.

.

மூலக்கதை