18 ஆம் வட்டாரத்தில் துப்பாக்கிச்சூடு! - கொலையாளிகள் தப்பி ஓட்டம்!!
நேற்று இரவு பரிசின் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, நேற்று திங்கட்கிழமை, பரிசின் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள rue de Myrha தெருவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணிக்கு இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு இரு துப்பாக்கி ஏந்திய கொலையாளிகள் தப்பி ஓடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருபது வயதுக்கு உட்பட்ட இளைஞன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் இக்குற்றம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொல்லப்பட்ட இளைஞனை காவல்துறையினர். நன்கு அறிந்துள்ளதாகவும், பண கொடுக்கல் வாங்கல் காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.