தர்மபுரி இளவரசன் மரணம்: அதிர்ச்சியளிக்கும் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
தர்மபுரி இளவரசன் மரணம்: அதிர்ச்சியளிக்கும் ...

தர்மபுரி இளவர்சன் மரணம் தற்கொலை தான் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.


    தர்மபுரி, நத்தம் காலனியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த இளவரசன், உயர் ஜாதியை சேர்ந்த இளம்பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் பெரும் கலவரங்கள் நடந்தன. இந்த சூழலில் திவ்யா இளவரசனை பிரிந்து தனது தாயுடன் சென்றார்.   இந்நிலையில் கடந்த 2013 ஜூலை 4-ஆம் தேதி இளவரசன் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இளவரசனின் மரணம். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.   இந்நிலையில் இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என இளவரசனின் தந்தை இளங்கோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.   இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சிபிசிஐடி போலிசார் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக தீர்ப்பளித்து வழக்கை இன்று முடித்து வைத்தது.

.

மூலக்கதை