பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்குதல்

PARIS TAMIL  PARIS TAMIL
பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்குதல்

 பல்கலைக்கழக மாணவர் சிலர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தெரிய வருகிறது. 

 
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை சேர்ந்த எட்டு புதிய மாணவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
 
விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் மெகொட கலிகமுவ என்ற இடத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர்.
 
இவர்களில் சிலர் புதிய மாணவர்கள் 8 பேரை கடத்திச் சென்று இந்த வாடகை வீட்டில் வைத்து நிர்வாணமாக்கி பல வகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதுடன் தாக்கியுமுள்ளனர்.
 
இப் பகிடிவதை குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் குறிப்பிட்ட வாடகை வீட்டை சோதனையிட்டு பகிடிவதை புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 15 மாணவர்களை பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
குறித்த மாணவர்களுக்கு மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.
 
விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரையும், விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கட்டிவைத்து, நிர்வாணமாக்கி துன்புறுத்தியதுடன். தாக்கியுள்ளனர்.
 
புதிதாக சேர்ந்து கொள்ளும் மாணவர்களுடன் பழகுவதற்கும் அவர்களது பயத்தை போக்குவதற்கும் சக மாணவர்களுடன் சகஜமாக பழகுவதற்குமே இந்த பகிடிவதை விளையாட்டாக மேற்கொள்ளப்படுகின்றது.
 
ஆனால் இங்கு மாணவர்கள் பகிடிவதை என்ற பெயரில் எதற்காக இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், இவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பது தொடர்பில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை