'பயங்கரவாதிகளுக்கு கருணை காட்ட முடியாது': சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: ‛பயங்கரவாதிகளிடம் கோர்ட் கருணை காட்ட முடியாது' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
டில்லியில், 1996ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி, நவுஷத், சகோதரியின் திருமணத்திற்கு, பரோலில் சென்று வர அனுமதிக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தான். வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு கூறுகையில் 'இது போன்ற கொடூர குற்றங்களை செய்தவர்களிடம், கோர்ட் கருணை காட்ட முடியாது' என்றனர்.