94 வது மாவட்டதில் தீப்பிடித்து எரிந்த வாகன திருத்துமிடம்! - இருவர் படுகாயம்!!
இன்று திங்கட்கிழமை அதிகாலை வாகன திருத்துமிடம் ஒன்று தவறுதலாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் இருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு Brévannes இன் rue Lavoisier in Limeil பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இரு இளம் நபர்கள் மோட்டார் வாகனம் ஒன்றை பழுது பார்த்துக்கொண்டிருக்கும் போது, பெற்றோல் தாங்கி ஒன்று எதிர்பாரா விதமாக தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து திருத்துமிடம் முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் சில பெற்றோல் தாங்கிகளில் தீ பரவி வெடித்துள்ளது. அதை தொடர்ந்து அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் வேகமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்.
இருப்பிலும் இருவரும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகிறது. இருவரும் Villeneuve-Saint-Georges இல் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர். அருகில் வசித்த ஏனையவர்கள் தங்குமிடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுள்ளது.