விஜய் ஹாசரே டிராபியில் டோனி, ரோகித் சர்மா?
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா காயம் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக விளையாடாமல் உள்ளார். லண்டனில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே வரும் 25ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள விஜய் ஹாசரே டிராபியில் மும்பை அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க இணை செயலாளர் உன்மேஷ் கன்வில்கர் கூறுகையில், ‘இது தொடர்பாக ரோகித் சர்மாவிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இன்று தேர்வுக்குழு கூடுகிறது. அப்போது விஜய் ஹாசரே டிராபியில் விளையாட விருப்பமா? என அவரிடம் கேட்போம்’ என்றார்.
இதேபோல் ஜார்கண்ட் அணிக்காக டோனியும் விளையாடுவார் என தெரிகிறது.