பலாத்கார முயற்சி சம்பவம்: நடிக்க மறுக்கும் பாவனா - ஹீரோ அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பலாத்கார முயற்சி சம்பவம்: நடிக்க மறுக்கும் பாவனா  ஹீரோ அதிர்ச்சி

சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் பாவனா. சில தினங்களுக்கு முன் கொச்சியில் மலையாள படப்பிடிப்பில் நடித்து முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தவரை சிலர் கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்குட்படுத்தினர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாவனா மீதான பாலியல் தாக்குலுக்கு பல்வேறு நட்சத்திரங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் பிருத்விராஜ் கூறியது: பாதிக்கப்பட்ட நடிகை (பாவனா)க்கு ஏற்பட்ட அவமானத்துக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும்.



இதுபோன்ற சம்பவங்களுக்கு உள்ளாகும் பலர் போலீசில் புகார் தராமல் இருந்து விடுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர், ஒட்டுமொத்த பெண்களின் சார்பிலான ஒரு பிரதிநிதியாக தைரியத்துடன் போலீசில் புகார் தந்திருக்கிறார்.

அவரது துணிச்சலை மதிக்கிறேன். விரைவில் அந்த நடிகையுடன் ஒரு படம் நடிக்கவிருந்தேன்.

ஆனால் அவர் தற்போதுள்ள மனநிலையில் உடனடியாக கேமரா முன் நின்று நடிக்க முடியாது என்பதால் அதிலிருந்து விலகுவதாக என்னிடம் கூறியிருக்கிறார். அந்த பெண்ணையும் அவரது துணிச்சலும் எனக்கு நன்றாக தெரியும்.

தான் விரும்பிய ஒரு துறையிலிருந்துகூட விலகி நிற்பதற்கான ஒரு முடிவை எடுக்கும் அவளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. இந்த சம்பவம் குறித்து தகுந்த விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு பிருத்விராஜ் கூறி உள்ளார்.

.

மூலக்கதை