சினிமாவில் நிறைய பாடம் கற்றேன் - மனம் திறக்கும் காஜல்
சினிமாவில் 10 ஆண்டு நிறைவு செய்திருக்கும் காஜல் அகர்வால் கூறியது: சிலர் கஷ்டத்தில் தடுமாறிப்போவார்கள். இன்னும் சிலர் அதை படிப்பினையாக எடுத்து வாழ்க்கையில் உயர்வார்கள்.
இதில் நான் இரண்டாவது ரகம். சந்தோஷத்தையும், கஷ்டத்தையும் சமமாக எடுத்துக்கொள்வதில்தான் நிஜமான மகிழ்ச்சியே இருக்கிறது.
நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. கடும் உழைப்பால் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறேன்.
இது எளிதாக கிடைத்துவிடவில்லை. நிறைய பிரச்னைகள், போராட்டங்கள் சந்தித்திருக்கிறேன்.
பிரச்னைகள் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். நான் தைரியமான பெண்.
அப்படி மாற்றியதற்கு நான் சந்தித்த பிரச்சினைகள்தான் காரணம்.
சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
சில நேரம் சோர்வு மனநிலையில் இருக்கிறோம். சோர்வு மனநிலை நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறது.
எந்த துறையாக இருந்தாலும் பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமாளிக்க தைரியம் வேண்டும். அப்படிபட்டவர்கள் தான் வாழ்க்கையில் பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள்.
எனக்கு ஏற்பட்ட பிரச்சினை களுக்கும், போராட்டங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னை மற்றவர்கள் அழகான புத்திசாலி என்று அழைக்கிறார்கள்.
குழப்பம் என்பது என் வாழ்க்கை அகராதியில் கிடையாது. பத்து வருடங்கள் தொடர்ந்து நடித்து விட்டேன்.
இனிமேல் நடிப்புக்கு சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருக்கிறது.
எனக்கு என்ன வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறேன். அதனால் எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறது.
புத்திசாலித்தனமான முடிவுகளையே எடுக்கிறேன்.
அதுபோன்ற கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். ”
.