அனுஷ்கா தந்த அதிர்ச்சி
'பாகுபலி 2' படத்தில் அனுஷ்கா இடம் பெற்ற போஸ்டரை படக் குழுவினர் கடந்த மாதம் வெளியிட்ட போது தெலுங்கு தேசத்தில் அந்தப் படப் போஸ்டர் குறித்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன. அனுஷ்காவின் தோற்றத்தை 'ஃபோட்டோஷாப்' மூலம் ஸ்லிம்மாக மாற்றியிருக்கிறார்கள் என பல கமெண்ட்டுகள் வெளிவந்தன. 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தனது தோற்றத்தை குண்டாக மாற்றிய அனுஷ்கா அதன் பின் அந்தத் தோற்றத்தில் இருந்து பழைய ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாற முடியாமல் சிரமப்பட்டார். அதனால் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் மிகவும் தாமதமாகவே கலந்து கொண்டார். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டே 'சி 3' படத்திலும் அனுஷ்கா கலந்து கொண்டுள்ளார்.
நேற்று வெளியான 'சி 3' படத்தில் அனுஷ்காவின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அனுஷ்கா 'ஆன்ட்டி' மாதிரி இருந்தால் கூடப் பரவாயில்லை. 'ஆன்ட்டி'க்கு அக்கா மாதிரி இருக்கிறாரே என்கிறார்களாம். அனுஷ்காவின் குண்டான தோற்றத்தால்தான் படத்தில் அவருக்கு நிறைய காட்சிகளை இயக்குனர் வைக்கவில்லை என்கிறார்கள். 'பாகுபலி 2' படம் போல 'சி 3' படத்தில் அனுஷ்காவிற்கும் கிராஃபிக்ஸ் செய்து உருவத்தை ஒல்லியாக மாற்றியிருக்கலாம். ஆனால், படத்தின் பட்ஜெட்டில் சூர்யாவை, சிங்கமாக மாற்றி கிராபிக்ஸ் செய்வதற்கு முக்கியத்துவம் அளித்ததால் அனுஷ்காவைப் பற்றி படக்குழுவினர் கண்டு கொள்ளவில்லை.
இனி, அனுஷ்காவைத் தேடி அம்மா, அக்கா கதாபாத்திரங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.