ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது: பென் ஸ்டோக்ஸ் ரூ.14.5 கோடிக்கு ஏலம்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களுருவில் தொடங்கியது. ஏப்ரல் 5-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கோரி ஆண்டர்சனை ரூ.1 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இர்பான் பதானை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. மேத்யூஸ் ரூ.2 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. பவன் நேகியை ரூ.1 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. நியூஸிலாந்து அணியை சேர்ந்த மார்ட்டின் குப்திலை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அலெஸ் ஹேல்ஸ் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோரை எந்த அணியும் எடுக்கவில்லை. இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். புனே அணி இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 14.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

மூலக்கதை