பாக்., கிரிக்கெட் வீரர் அப்ரிதி ஓய்வு அறிவிப்பு

தினமலர்  தினமலர்
பாக்., கிரிக்கெட் வீரர் அப்ரிதி ஓய்வு அறிவிப்பு

கராச்சி: பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு:


பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான அப்ரிதி, 36. சர்வதேச போட்டியிலிருந்து விடை பெற்றார். முன்னதாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அப்ரிதி, டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சாதனை:


இதுவரை 27 டெஸ்ட் (1716 ரன், 48 விக்.,), 398 ஒருநாள் (8,064 ரன், 395 விக்.,), 98 மற்றும் சர்வதேச 'டுவென்டி-20' (1,405 ரன், 97 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மூலக்கதை