தாயை கத்தியால் குத்தி கொன்ற பெண்! - இளம்பெண் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
தாயை கத்தியால் குத்தி கொன்ற பெண்!  இளம்பெண் கைது!!

தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்த 26 மகள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, Toulouse நகரில் நேற்று சனிக்கிழமை தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 59 வயதுடைய தனது தாயாரை கத்தி ஒன்றின் மூலம் பல தடவைகள் குத்தி கொன்றுள்ளார். குறித்த பெண் schizophrenia எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் 59 வயதுடைய அப்பெண்ணின் தாயாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மூலக்கதை