பாகிஸ்தான் விரை வியாபித்துள்ள கடற்புலிகளின் தாக்குதல்!

PARIS TAMIL  PARIS TAMIL
பாகிஸ்தான் விரை வியாபித்துள்ள கடற்புலிகளின் தாக்குதல்!

 கடற்புலிகளின் வீரதீர செயற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் கடற்படையினருக்கு அனுபவ பாடங்களாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. 

 
சிறிலங்கா கடற்படைத் தளபதியினால் பாகிஸ்தான் கடற்படையினருக்கு இது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அங்கு நடந்த செயலமர்வில் கடற்புலிகள் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். 
 
இதன்போது கடற்புலிகளின் வளர்ச்சி, விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதல் உத்திகள், சிறிலங்கா கடற்படையின் பதில் நடவடிக்கை, தற்கொலை தாக்குதல்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள், சிறிய படகுகள் கருத்திட்டம் குறித்த ஆய்வும், அபிவிருத்தியும், விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து சிறிலங்கா கடற்படைத் தளபதி விளக்கமளித்துள்ளார்.

மூலக்கதை