நிதி துறை சாரா முத­லீ­டு­க­ளுக்கு தனி நிறு­வனம்: சுந்­தரம் பைனான்ஸ்

தினமலர்  தினமலர்
நிதி துறை சாரா முத­லீ­டு­க­ளுக்கு தனி நிறு­வனம்: சுந்­தரம் பைனான்ஸ்

சென்னை : சென்­னையைச் சேர்ந்த, சுந்­தரம் பைனான்ஸ் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:நிறு­வனம், அதன், நிதி துறை சாரா முத­லீட்டு வர்த்­த­கத்தை பிரித்து, சுந்­தரம் பைனான்ஸ் இன்­வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறு­வ­னத்தின் கீழ், கொண்டு வர முடிவு செய்­துள்­ளது. இதற்கு, நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழு, ஒப்­புதல் அளித்­துள்­ளது. இதை­ய­டுத்து, பங்கு முத­லீட்­டா­ளர்­களின் அனு­ம­தி­யுடன், சுந்­தரம் பைனான்ஸ் இன்­வெஸ்ட்மென்ட்ஸ் நிறு­வ­னத்தின் பங்­குகள், பங்குச் சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­படும். இதற்­காக, உரிய விதி­மு­றை­களை பூர்த்தி செய்து, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பிடம் அளித்து, அனு­மதி பெறப்­படும். சுந்­தரம் பைனான்ஸ் நிறு­வ­னத்தின் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு, அவர்கள் வைத்­துள்ள பங்­கு­க­ளுக்கு நிக­ராக, சுந்­தரம் பைனான்ஸ் இன்­வெஸ்ட்மென்ட்ஸ் நிறு­வ­னத்தின் பங்­குகள், இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

மூலக்கதை