வரி செலுத்தாமல் ஏய்க்கும் சொகுசு விடுதிகள் நடவடிக்கை எடுக்க ஓட்டல் துறை கோரிக்கை - பாரபட்ச கொள்கையால் பாதிப்பு
மும்பை : ‘ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை, சொகுசு விடுதிகள், குறுகிய காலத்திற்கான, வாடகை குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும் அமல்படுத்த வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, ஓட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் கூட்டமைப்பின் மேற்கு இந்திய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, இக்கூட்ட மைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:அமைப்பு சார்ந்த ஓட்டல் துறையில், ஓர் உணவகம், தங்கும் விடுதி ஆகியவற்றை துவக்கவும், வர்த்தகம் புரியவும், 42க்கும் அதிகமான உரிமங்கள் பெற வேண்டியுள்ளது. ஒரு ரூபாய் கூடஆனால், அமைப்பு சாரா துறையில், ஓர் உரிமம் கூட இல்லாமல், சொகுசு விடுதிகளை நடத்துவது; உணவு வசதியுடன் அறைகளை வாடகைக்கு விடுவது ஆகியவற்றின் வர்த்தகம், ஜோராக நடைபெற்று வருகிறது. தற்போது, நாடு முழுவதும், ஏராளமான சொகுசு விடுதிகள் பெருகியுள்ளன. அது போல, சுற்றுலா பயணிகள், குறுகிய காலம் தங்கிச் செல்லும் வசதி கொண்ட குடியிருப்புகளும், புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இவை, அமைப்பு சார்ந்த ஓட்டல்களுக்கான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதால், தங்கும் அறைகளுக்கு மிகக் குறைவான வாடகை வசூலிக்கின்றன.இதன் காரணமாக, சொகுசு விடுதிகள், விருந்தினர் குடில்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றில் தங்க, சுற்றுலா பயணி கள் விரும்புகின்றனர். இங்கு, உணவு, மது உட்பட, ஓட்ட லில் வழங்கப்படும் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், அவற்றின் வாடகையில், 38 சதவீதத்தை, வரியாக, நேரடியாகவும், மறைமுகமாகவும், அரசுக்கு செலுத்தி வரும் நிலையில், சொகுசு விடுதிகள், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல், வர்த்தகம் செய்கின்றன. வரி வருவாய்இத்தகைய சொகுசு விடுதிகள், தங்கும் அறைகள் உள்ளிட்டவற்றின் விபரங்களை வழங்கி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வலைதள நிறுவனங்கள் வாயிலாகவும், அரசுக்கு வரி வருவாய் கிடைப்பதில்லை. அமைப்பு சார்ந்த ஓட்டல்கள், அவற்றின் அறைகளில் தங்கும் வெளிநாட்டு பயணிகள் குறித்த விபரங்களை, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என, விதிமுறை உள்ளது. ஆனால், இது போன்ற தகவல்களை, சொகுசு விடுதி கள், பண்ணை இல்லங்கள் போன்றவை, போலீசாருக்கு வழங்குவதில்லை. அச்சுறுத்தல்தங்களை பற்றிய விபரங்களை தெரிவிக்க விரும்பாத அன்னியர்கள், சொகுசு விடுதிகளை நாட, இதுவும் ஒரு காரணமாகும். இது, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அம்சமாகவும் உள்ளது. ஆகவே, எந்தவொரு சட்டத் திட்டங்களுக்கும் உட்படாமல், வரி செலுத்தாமல் செயல்படும், சொகுசு விடுதிகள், குடியிருப்புகள், பண்ணை இல்லங்கள் ஆகியவற்றுக்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா ஓட்டல் துறைகள் பின்பற்றும் வகையில், பாரபட்சமற்ற கொள்கையை, மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதன் மூலம், ஓட்டல் துறை சீரான வளர்ச்சி காணும்; அரசுக்கும் குறிப்பிடத்தக்க வரி வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.