யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக பலியான 23 வயது இளைஞர்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக பலியான 23 வயது இளைஞர்!

 பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரைசேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
இன்று பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  குறிப்பிடப்படுகின்றது.
 
பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
 
இந்த விபத்தில், யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 குறித்த இளைஞர் வந்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
 
இதன் போது உழவு இயந்திர சாரதி படு காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் குறித்த விபத்துக்கு அதி வேகமே கரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
 
 

மூலக்கதை