சிறிலங்காவில் பேஸ்புக் ஊடாக பாரிய மோசடியில் ஈடுப்பட்ட 9 வெளிநாட்டவர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவில் பேஸ்புக் ஊடாக பாரிய மோசடியில் ஈடுப்பட்ட 9 வெளிநாட்டவர்கள்!

 பேஸ்புக் ஊடாக பலரிடம் தொடர்பினை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
நைஜீரிய பிரஜைகள் 9 பேரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
 
போலியான பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து லண்டனில் வசிப்பதாகத் தெரிவித்து, பலருக்கு இவர்கள் போலியான பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
 
இந்த விற்பனை மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பல இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 
மாலபே பகுதியில் தற்காலிகமாகத் தங்கியிருந்த வேளையலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை