வெற்றிபெறாமல் ஓயப்போவதில்லை - François Fillon சூளுரை!!
ஜனாதிபதி தேர்தல் போட்டியில் வெற்றி பெறாமல் நான் ஓயப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் François Fillon தெரிவித்துள்ளார்.
Figaro பத்திரிகைக்கு வழங்கிருந்த நேர்காணலில், ஜனாதிபதி வேட்பாளர் François Fillon இதனை தெரிவித்துள்ளார். 'மிக மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. என்மீது சுமத்தப்பட்ட பொய்கள், குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தகர்ப்பேன். நான் அனைத்து தாக்குதல்களுக்கும் முகம் கொடுப்பேன். என்னுடைய அரசியல் முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கில் பல சம்பவங்கள் இடம்பெறுகிறது! என François Fillon தெர்வித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் பல இறுக்கமான சூழ்நிலைகளை François Fillon சந்தித்து வருகிறார். பண மோசடி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பணியில் அமர்த்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே.
மேற்படி நேர்காணலில், 'எனக்கு இறுக்கமான நிலை உருவாக்கப்படுகிறது!' என்பதை மிக உறுதியாக François Fillon குறிப்பிட்டுள்ளார்.