அமெரிக்காவினால் இலங்கையர்களுக்கு கிடைக்கும் அதிஷ்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்காவினால் இலங்கையர்களுக்கு கிடைக்கும் அதிஷ்டம்!

 அமெரிக்கா, சிறிலங்காவுக்கு நிதி உதவிகளை வழங்க உள்ளதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

 
இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டமாக இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
இந்தத் திட்டத்தின் கீழ் 5000 அமெரிக்க டொலர் நிதி உதவித் தொகை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
 
அத்துடன், கலாசார நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் துறையினரும் இந்த உதவுதொகைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
 
நல்லிணக்கம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
 

மூலக்கதை