மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் சாவு

கீழ்ப்பாக்கம்- காஞ்சிபுரம் பல்லவர் மேடுபகுதியை சேர்ந்தவர் மூஷா (37). பெயின்டர்.

இவருக்கு நிஷா (35) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சிறையில அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா அங்கு கையால் அடித்து சபதம் செய்தார்.

இதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பின. இந்த காட்சிகளை வீட்டில் இருந்து டிவியில் பார்த்த மூஷா கடும் வேதனை அடைந்தார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மூஷா, பன்னீர்செல்வத்தை எந்த விதத்திலாவது பழிவாங்குவாரோ என அதிர்ச்சியடைந்தார். கடந்த 15ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த மூஷா மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பன்னீர்செல்வம் அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு மூஷா பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

.

மூலக்கதை