தொண்டர்கள், தொகுதிமக்களின் விருப்பமே முக்கியம்; பணம், பதவி எனக்கு முக்கியமில்லை - கோவை அதிமுக எம்எல்ஏ பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொண்டர்கள், தொகுதிமக்களின் விருப்பமே முக்கியம்; பணம், பதவி எனக்கு முக்கியமில்லை  கோவை அதிமுக எம்எல்ஏ பேட்டி

கோவை- சென்னை கூவத்தூர் ரிச்சார்டில் தங்கியிருந்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ. ,பி. ஆர். ஜி அருண்குமார், நேற்றிரவு அங்கிருந்து வெளியேறி இன்று காலை கோவை வந்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களிடம் கூறியதாவது; எம்ஜி. ஆர். , ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவில் தற்போதைய தலைமையின் போக்கு பிடிக்காததால், கூவத்தூரிலிருந்து வெளியேறி வந்து விட்டேன்.

மூத்த தலைவர்கள் எல்லாம் சொல்லியதால் தான் சசிகலாவை பொது செயலாளராக தேர்வு செய்ய ஆதரவு அளித்தோம். இதற்கு அப்போதே அடிமட்ட தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிடிவி தினகரன் துணை செயலாளராக ஆக்க நினைத்த போது, தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தற்போது அது வேண்டாம் என மூத்த அமைச்சர்கள் ஆலோசனை கூறினார். ஆனால் அதை சசிகலா தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

சசிகலா கைவசம் கட்சி போய்விட்டது குடும்ப கட்சியாக மாறி வருகிறது. அது பிடிக்காததால் தான் வெளியேறினேன்.

பணமோ, பதவியோ எனக்கு முக்கியமில்லை. தொண்டர்களும், தொகுதி மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி முடிவு எடுத்துள்ளேன்.

இவ்வாறு அருண்குமார் கூறினார்.

.

மூலக்கதை