கிளாமராக மட்டும் பயன்படுத்தினர் இயக்குனர்கள் மீது டாப்ஸி தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிளாமராக மட்டும் பயன்படுத்தினர் இயக்குனர்கள் மீது டாப்ஸி தாக்கு

நடிகை டாப்ஸி தற்போது இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தென்னிந்திய படங்களிலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்பதற்கு தயக்கம் காட்டுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியது:தென்னிந்திய படங்களில் நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கப்படவில்லை. மாறாக கிளாமர் வேடங்களைத்தான் தந்தார்கள்.

படம் தோல்வி அடைந்தால் அதற்கு யார் பொறுப்பு? அந்த நேரத்தில் மட்டும் என்னை ராசி இல்லாத நடிகை என்று குற்றம் சொல்வது ஏன்? நடிப்பு திறமையை வெளிப்படுத்தக்கூடிய வேடம் ஒருபோதும் எனக்கு தரப்பட்டதில்லை. அதனால்தான் நான் பாலிவுட் படங்களில் கவனத்தை திருப்பி இருக்கிறேன்.

இந்தியில் நான் நடித்த பிங்க் படம் நல்ல பெயரை பெற்றுத்தந்திருக்கிறது. ஒருவரை திட்டுவது, பழி சொல்வது எளிது அதற்கு முன் காரண காரியத்தை ஆராய மறந்து விடுகிறார்கள்.

ராசி இல்லாத நடிகை என்று என் மீது குற்றம் சாட்டினாலும் சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்திருக்கிறேன், கைநிறைய சம்பாதித்தும் இருக்கிறேன்.

அதன்பிறகு திட்டி என்ன பிரயோஜனம்?
இவ்வாறு டாப்ஸி கூறினார்.

.

மூலக்கதை