மீண்டும் டுவிட்டரில் திரிஷா ஐக்கியம் - ஜல்லிக்கட்டில் ‘அவுட்’ காதலர் தினத்தில் ‘இன்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீண்டும் டுவிட்டரில் திரிஷா ஐக்கியம்  ஜல்லிக்கட்டில் ‘அவுட்’ காதலர் தினத்தில் ‘இன்’

நடிகை திரிஷா இணைய தள டுவிட்டர் பக்கத்தில் ஆர்வம் காட்டியவர். தான் நடிக்கும் படம், தோழிகளுடன் அரட்டை, காதல் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் அதில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அவரது பக்கத்தை 30 லட்சத்துக்கும் அதிகமான வர்கள் பின்பற்றி (ஃபாலோ) வந்தனர். நன்றாக சென்றுகொண்டிருந்த இந்த விஷயம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டபோது சர்ச்சைக்குள்ளானது.

ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்ற பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவும் அந்த அமைப்பில் அவர் உறுப்பினராக உள்ளதாகவும் தகவல் பரவியதையடுத்து திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கர்ஜனை படப்பிடிப்பில் திரிஷா பங்கேற்றபோது போராட்டக்காரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் படப்பிடிப்பு ரத்தானது. டுவிட்டர் பக்கத்திலும் அவரை சரமாரியாக தாக்கி கருத்து தெரிவித்தனர்.

தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர் என்றும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். ஆனாலும் எதிர்ப்பு தொடர்ந்தது.

இதையடுத்து டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார். மாணவ, மாணவிகள் போராட்டத்துக்கு வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றப்பட்டது.

அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த பரபரப்பு ஓய்ந்ததையடுத்து திரிஷா மீண்டும் இணைய தள பக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 14ம் தேதி காதலர் தினம் முதல் மீண்டும் தகவல் பரிமாறத் தொடங்கி இருக்கிறார்.

கர்ஜனை படத்தில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்பதற்கான புகைப் படத்தை வெளியிட்டிருக்கிறார்.

.

மூலக்கதை